Afleveringen
-
Zijn er afleveringen die ontbreken?
-
கருணாநிதியின் 50 ஆண்டுக்கால சட்டமன்ற பொன்விழாவை தமிழக சட்டமன்றத்தின் மைய மண்டபத்துக்குள் தான் கொண்டாடவேண்டுமா ?
அதற்கு வரமறுத்த அப்துல்கலாமை கருணாநிதி அடித்த கிண்டல்கள் மறக்க கூடியதா ?
அவர்களை எல்லாம் மிஞ்சிவிட்டார் ஜெயலலிதா .
Listen to Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a series about politics!
Podcast channel manager- பிரபு வெங்கட்
-
சென்னை சட்டக் கல்லூரியில் வைத்துத்தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் முதன் முதலாகச் சந்தித்தனர். இரண்டு பேருமே சட்டம் படித்தவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம். சென்னை சட்டக் கல்லூரியின் ஆண்டு விழாவில் பரதநாட்டியம் ஆட 12 வயதில் ஜெயலலிதா வந்திருந்தார். அன்றைய சிறப்பு அழைப்பாளர் எம்.ஜி.ஆர்.
Listen to Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a series about politics!
Podcast channel manager- பிரபு வெங்கட்
-
பெங்களூர் சாம்ராஜ்நகரில் இரண்டு வீடுகள்!
ஒரு வீடு பேலஸ் மாதிரி பெரியது. இன்னொன்று அடக்கமான சிறிய வீடு. ஒரு வீட்டின் பெயர் ஜெய விலாஸ். இன்னொரு வீட்டின் பெயர் லலித விலாஸ்
ஜெய விலாஸில் இருந்த ஜெயமும், லலித விலாஸில் இருந்த லலிதமும் பிரித்துச் சேர்க்கப்பட்ட பெயர்தான் ஜெயலலிதா.
Listen to Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a series about politics!
Podcast channel manager- பிரபு வெங்கட்
-
நீரும் நெருப்பும்’ படத்தின் வெளியீட்டு விழா சென்னை தேவி திரையரங்கத்தில் நடந்தது. படத்தை வெளியிட்டுப் பேச அன்றைய முதலமைச்சர் கருணாநிதி வந்திருந்தார். படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர்.
Listen to Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a series about politics!
Podcast channel manager- பிரபு வெங்கட்
-
பெரியோர்களே... தாய்மார்களே! - 76 | அதுவரை தமிழகம் கேட்காத குரல்; அதுவரை தமிழகம் உணராத தமிழ்; அதுவரை அண்ணா பார்க்காத ஆள். கருணாநிதியின் வெற்றி இந்த மூன்றில்தான் இருக்கிறது. ‘‘உங்கள் கல்லறையில் என்ன எழுதப்பட வேண்டும்?” என்று நினைக்கிறீர்கள் என்று கருணாநிதியிடம் கேட்கப்பட்டபோது, ‘‘ஓய்வில்லாமல் உழைத்தவன் இங்கு ஓய்வுகொள்கிறான்” என்று எழுதச் சொன்னவர் கருணாநிதி.
Podcast channel manager- பிரபு வெங்கட்
-
பெரியோர்களே தாய்மார்களே! 75 | ‘‘காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே ஒரு லட்சியத்துடன் யாரும் எங்களோடு வரலாம், அவர்கள் எங்களோடு உடன்பாடான கொள்கை கொண்டவர்களாகவும் இருக்கலாம், எதிர் கொள்கை கொண்டவர்களாகவும் இருக்கலாம்’’ என்று அண்ணா அன்று போட்டுக்கொடுத்த சூத்திரம்தான் இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது.
Podcast channel manager- பிரபு வெங்கட்
-
பெரியோர்களே தாய்மார்களே! 74 | திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதற்கும் ஆட்சியைப் பிடித்ததற்கும் இடைப்பட்ட 18 ஆண்டு காலம் என்பது ஒவ்வோர் அரசியல்வாதியும் கற்றுக்கொள்ள வேண்டிய பாலபாடம். 18 ஆண்டு காலமும் பாரத யுத்தம்போல் நடத்தியதால்தான் அரியணையில் அண்ணாவால் உட்கார முடிந்தது.
Podcast channel manager- பிரபு வெங்கட்
-
பெரியோர்களே... தாய்மார்களே! - 73 | இந்திக் கிளர்ச்சியை விட விலைவாசி உயர்வு எல்லா மக்களையும் கோபப்படுத்தியது. ‘‘பக்தவத்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சு? காமராஜர் அண்ணாச்சி கடுகு விலை என்னாச்சு?” என்ற முழக்கங்கள் தெருவெல்லாம் தெறித்தன. மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள் ..
Podcast channel manager- பிரபு வெங்கட்
-
ஒரு விபரீத யோசனை நேருவுக்கு எதனால் வந்தது? யாரால் வந்தது என்று இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ‘இந்தியாவை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப் போகிறேன்’ என்று திடீர் பிரகடனம் செய்தார் அவர்.
கிழக்கு மாகாணம், மேற்கு மாகாணம், வடக்கு மாகாணம், தெற்கு மாகாணம், மத்திய மாகாணம் என்று அதற்குப் பெயர்களும் சூட்டினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாகாணங்கள் சேர்ந்து ஒரே மாகாணமாக, ‘தெற்கு மாகாணமாக ஆக்கப்படும்’ என்றார். அவரது மொழியில் சொல்லப்போனால் அதற்கு, ‘தட்சிணப் பிரதேசம்’ என்று பெயர்.
Podcast channel manager- பிரபு வெங்கட்
-
சென்னை மாநகரே ஆந்திராவுக்குப் போயிருந்தால்...? நினைக்கவே நெஞ்சு அடைக்கிறது! தமிழ்நாடு தலை இல்லா நாடாக இருந்திருக்கும்.
‘வட வேங்கடம் என்பது தமிழர் பகுதியே. அதனை விடமாட்டோம்’ என்றார் ம.பொ.சி. திருத்தணி தொடங்கி திருப்பதி வரைக்கும் போராட்டக்களமாக மாற்றினார்.
சென்னையை ஆந்திர மாநிலத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று போராடுபவர்களின் வீட்டுக்குத் தண்ணீர் தர மாட்டேன். அவர்கள் செத்தால்கூட, புதைக்க சென்னையில் இடம் கிடையாது” என்று பகிரங்கமாக அறிவித்தார்.
Podcast channel manager- பிரபு வெங்கட்
- Laat meer zien