Afleveringen

  • Original by Raghavan Srinivasan ராகவன் சீனிவாசன் (Author), Sridhar Trichendurai ஸ்ரீதர் திருச்செந்துறை (Translator) a proud audiobook production by aurality/ itsdiff entertainment ebook by Swasam Publications


    download FREE aurality app

    apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or
    play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share

    தமிழக வரலாற்றில் மட்டுமின்றி தென்னிந்திய வரலாற்றிலும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் 'பொற்காலம்' என்றே கருதப்படுகிறது. ராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்ததும், தமிழர்களின் நூற்றாண்டுப் பெருமிதத்தையும் கலையையும் மீட்டெடுத்தார். என்றென்றும் அழிக்க இயலாத ஒரு பாரம்பரியத்தை உருவாக்கினார். இன்றளவும் நாம் ராஜராஜ சோழனின் புகழைப் பேசுகிறோம் என்பதிலிருந்தே இவரது ஆட்சிச் சிறப்பைப் புரிந்துகொள்ளலாம். ராணுவம், கலைகள், மதம், இலக்கியம் என அனைத்துத் துறைகளும் இவரது ஆட்சிக் காலத்தில் சிறந்து விளங்கின. ஈழத்தின் மேல் படையெடுத்து அதையும் வென்றவர் ராஜராஜ சோழன். அருண்மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழனின் வரலாற்றையும், சோழர்களின் சாதனைகளையும் ஆதாரபூர்வமாகவும் எளிமையாகவும் விரிவாகவும் சொல்லும் நூல் இது. எழுத்தாளர் ராகவன் சீனிவாசன் எழுதி ஸ்ரீதர் திருச்செந்துறை மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். a proud tamil audiobook production from Aurality/ itsdiff Entertainment

  • ஆறுமுகனின் வனவாசம்:

    download aurality app and give it a listen

    apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or
    play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share

    இது வீடு விட்டு, காடு செல்லும் கதை. அமலமுனி குறிப்பிட்ட அந்த ஒரு ஆண்டில் காட்டில் நடக்கும் நிகழ்வுகளே இக்கதை... ஆறுமுகன் அதற்கு எவ்வாறு தன்னை தயாராக்கி கொண்டு, தடைகளை தவிர்த்து, காட்டில் வாழ்ந்து அமலமுனி கூறிய ஓராண்டில், ஆறுமுகன் என்ன என்ன மாற்றங்கள் பெற்று இருப்பான் என்பதை இனி வெளிவரும் பாகங்களிலேயே காணலாம்... த.ஆ.வெங்கடேஷ் முருகா ================ an aurality/ itsdiff Entertainment production

  • Zijn er afleveringen die ontbreken?

    Klik hier om de feed te vernieuwen.

  • Malaiyankulam - Short story collection

    மலையன்குளம் (சிறுகதைத் தொகுப்பு)

    Malayankulam - மலையன்குளம் - Short story collection a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback

    how is it apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or
    play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share

    சிறுகதைகள் எப்போதுமே மனதுக்கு நெருக்கமானவை. நம் பால்ய கால நினைவுகளைக் கிளர்த்தும் கதைகள் கூடுதல் நெருக்கமானவை. நம் நினைவுகளைக் கிளர்த்துபவை. கரைய வைப்பவை. மலையன்குளம் என்ற இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகள் இந்த வகையைச் சேர்ந்தவை. ஜெயராமன் ரகுநாதனின் பூச்சுகளற்ற நடையில், இந்தக் கதைகளுக்குள் நாம் இயல்பாகவே நுழைந்து விடுகிறோம். இதில் வரும் கதாபாத்திரங்களை நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் ஒரு தடவையேனும் நிச்சயம் கடந்து வந்திருப்போம். இதில் வரும் நிகழ்வுகள் நம் வாழ்விலும் நடந்திருக்கும். இந்தக் கதைகளில் வரும் ‘இவன்’ நாமாகவும் இருக்கலாம். இந்தக் கதைகள் உங்களைச் சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், நெகிழவும் வைக்கும். பல பசுமையான நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் கால இயந்திரமாக இந்தக் கதைகள் இருக்கும்.

    எழுத்தாளர் ஜெயராமன் ரகுநாதன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். a proud tamil audiobook production from Aurality

    Author:

    Jayaraman Raghunathan
    Narrator:

    Bhavani Anantharaman
    Publisher:

    Itsdiff Entertainment

  • Title:

    Porkai Swamigal – Sri Sheshadri Swamigal

    Subtitle:

    பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்


    a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback

    how is it apple store ?

    https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or
    play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share

    பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் - காற்றின் திசை காற்றின் வேகம் காற்றின் மொழி. ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ‘தங்கக் கை சுவாமிகள்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகான். பகவான் ரமணரின் சமகாலத்தவர். சுவாமிகள் தொட்டது துலங்கும். மகா ஞானி. திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த சந்நியாசி. அதிகம் பேசாமல், மிகக் குறைந்த வார்த்தைகளில் உலகையே ஸ்தம்பிக்கச் செய்யும் பேருண்மைகளைச் சொல்லி விடும் பித்து நிலைச் சித்தர். ஞான திருஷ்டியில் முக்காலமும் திரிபவர். அஞ்ஞானத்தை அறுத்து மெய்ஞானத்தைத் தன் சிஷ்யர்களுக்கு அளித்தவர். காஞ்சி காமாட்சியின் அவதாரம். ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் போலப் பல சித்தர்கள் எவ்வித உரைநூலோ உபதேசங்களோ வழங்காமல், தங்களது யோக சித்திகள் மூலம் வாழ்ந்து காட்டிச் சென்று விடுகிறார்கள். அவர்களது ஞானத்தின் விரிவு நூல்களாகத் தொகுக்கப்படுவதில்லை. இதுபோன்ற பிரம்மஞானிகளின் வாழ்க்கையை இதுபோன்ற சித்திரமாகத் தீட்டும்போதுதான், அவர்களைப் பற்றிய தகவல்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்த முடியும். சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றிப் பேசும்போது பகவான் ரமணரைப் பற்றிப் பேசாமல் இருப்பது எங்கனம்? இந்த நூல் பகவான் ரமணரைப் பற்றிய ஒரு சித்திரத்தையும் சேர்த்துத் தருவது அழகு. அதோடு, சுவாமிகளின் சமகாலத்து ஞானிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. படிப்பவர்களைக் கரைய வைக்கும் அழகுத் தமிழில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். a proud audiobook production from Aurality

    Author: Sathiyapriyan
    Narrator: Pushpalatha Parthiban
    Publisher:

    audiobook - Itsdiff Entertainment
    ebook - Swasam

  • நன்றி - ஆராலிட்டி தரை இறக்கி வாசிக்கவும், எங்கள் ஒலிப் புத்தகத்தினை கேட்டு மகிழவும் - have you downloaded aurality app ?
    how is it apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or
    play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share


    Eliya Tamilil Chola Varalaaru

    Subtitle:

    எளிய தமிழில் சோழ வரலாறு



    An Aurality Tamil Audio Book Production - http://aurality.app

    Educate, Entertain and Enhance

    Eliya Tamilil Chola Varalaaru (Original: Rasamanikkanar): (மூலம்: இராசமாணிக்கனார்)

    எழுத்தாளர் அச்யுதன் ஶ்ரீ தேவ் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின்

    Aurality tamil audio book வழங்கும் ஒலிவடிவம் கேட்போம்.

    இராசமாணிக்கனாரின் சோழர் வரலாறு நூல் மிகவும் முக்கியமான நூல். ஆழமான ஆய்வுடன் அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் ஆதாரத்துடன் விரிவாக எழுதி இருக்கிறார் இராசமாணிக்கனார். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் இந்த நூலின் முதல் பதிப்பிற்குத் தந்திருக்கும் முன்னுரையே இதற்கு ஆதாரம். இராசமாணிக்கனாரின் காலத்து ஆய்வுத் தமிழில் அமைந்த நூல் இந்தக் காலத்துக்கு ஏற்ற வகையில் எளிய தமிழில் முழுமையாக மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. பொதுயுகத்துக்கு முன்பான சோழர்கள் தொடங்கி, சோழன் நலங்கிள்ளி, கிள்ளி வளவன், கோப்பெருஞ்சோழன், நெடுமுடிக்கிள்ளி என அனைத்து மன்னர்களையும் ஆராய்ந்து, எழுச்சி பெற்ற சோழர்கள் காலத்தைச் சேர்ந்த முதல் பராந்தக சோழன், முதலாம் ராஜராஜன், ராஜேந்திர சோழன் போன்ற அரசர்களின் ஆட்சியையும் அவர்களது சாதனைகளையும் விவரித்து, பின்னர் முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் ராஜேந்திரன் வரையிலான அனைத்து சோழர்களின் வரலாறும் ஆய்வுபூர்வமாக இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. சோழர்கள் ஆட்சியின் சிறப்பு, கொடை, கல்வெட்டுகள், நிவந்தங்கள், சோழர்கள் கட்டிய கோவில்கள், சோழர்களின் படையெடுப்புகள் என இந்த நூலில் இடம்பெறாத தகவல்களே இல்லை எனலாம்.

    தமிழ்நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்துகொள்ள நினைக்கும் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கவேண்டிய அரிய நூல் இது.


    Author:

    Achyutan Shree Dev
    Narrator:

    Pushpalatha Parthiban
    Publisher of audiobook Itsdiff Entertainment
    ebook by Swasam Publications

  • நன்றி - ஆராலிட்டி தரை இறக்கி வாசிக்கவும், எங்கள் ஒலிப் புத்தகத்தினை கேட்டு மகிழவும் - have you downloaded aurality app ?
    how is it apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or
    play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share

    Vaikom Poraattathil Brahmanargal

    Subtitle:

    வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள்

    Series Name:

    Not Set
    Series Entry:

    Not Set
    Description:

    An Aurality Tamil Audio Book Production திருவாங்கூர் சமஸ்தானத்தில் தீண்டாமைக்கு எதிராக நடந்த வைக்கம் போராட்டம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய நிகழ்வாகும். பட்டியலினத்தவர்களின் கோவில் நுழைவைச் சாத்தியமாக்கிய இப்போராட்டத்தைக் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. வைக்கம் போராட்டத்தில் பல முக்கியமான தலைவர்கள் பங்கெடுத்தனர். ஆனாலும் இப்போராட்டத்தில் பங்கெடுத்த தலைவர்கள் குறித்து விவாதம் நடந்தவண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தப் போராட்டத்தைப் பிராமணர்களுக்கு எதிராகச் சித்திரிப்பதில் சில அரசியல் சக்திகளுக்கு உள்நோக்கமும் ஆதாயமும் இருப்பது கண்கூடு. இந்தக் கேள்விகளுக்கு ஆய்வுநோக்கில் ஆதாரபூர்வமாகப் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம்.

    * வைக்கம் போராட்டத்தில் பிராமணர்களின் பங்களிப்பு என்ன?

    * இந்தப் போராட்டத்திற்குப் பிராமணர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இருந்தனவா?

    * இந்தப் போராட்ட வெற்றியில் பிராமணர்களின் பங்கு என்ன?

    இந்தக் கேள்விகள் குறித்து ஆசிரியர் மா.வெங்கடேசன் தெளிவாக இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார். மறைக்கப்பட்ட பலரது முகங்களை, தியாகங்களை ஆதாரத்தோடு பதிவு செய்கிறது இந்தப் புத்தகம்.

    An Aurality Tamil Audio Book Production


    எழுத்தாளர் மா.வெங்கடேசன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் Aurality tamil audio book வழங்கும் ஒலிவடிவம் கேட்போம்.

    Author:

    M. Venkatesan
    Narrator:

    Pushpalatha Parthiban
    audio book Publisher: Itsdiff Entertainment
    ebook by Swasam publications

  • நன்றி - ஆராலிட்டி தரை இறக்கி வாசிக்கவும், எங்கள் ஒலிப் புத்தகத்தினை கேட்டு மகிழவும் - have you downloaded aurality app ?
    how is it apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or
    play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share

    Vedha Kaalam

    Subtitle:

    வேத காலம் (சுருக்கம்)

    Series Name:

    Not Set
    Series Entry:

    Not Set
    Description:

    Vedha Kaalam (Abridged) - a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment

    http://aurality.app to download our app to provide feedback

    - வேத காலம் (சுருக்கம்) Download Aurality in app store , google play to support tamil digitization Rate our audio book Nandri 1. வேதங்கள் எப்போது எழுதப்பட்டன? 2. வேதங்கள் ஏன் எழுத்தில் எழுதப்படவில்லை? 3. சோமரசம் என்பது மதுபானமா? 4. வேத காலக் கல்வி அமைப்பின் சிறப்பு அம்சங்கள் யாவை? 5. வேத காலத்தில் பெண்களின் நிலை என்ன? 6. வேத காலச் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு எப்படி இருந்தது? 7. வர்ணாஸ்ரம தர்மத்தின் அடிப்படை என்ன? இவை போன்ற கேள்விகளுக்குத் தற்காலத்தில் பலவிதமான பதில்கள் பலராலும் வழங்கப்படுகின்றன. அவற்றுள் எது உண்மை என்பதை அறிவது கடினம். பெரும்பாலான பதில்கள் தவறான உள்நோக்கத்துடன் பரப்பப்படுகின்றன. வேத காலம் குறித்த கேள்விகளுக்கு உண்மையான, ஆதாரபூர்வமான விடையைத் தேடுவதே இந்த நூலின் நோக்கம். ஆயிரம் பக்கங்களுக்கு நீளும் நீண்ட புத்தகத்தின் சுருக்கப்பட்ட வடிவம் இது. எளிமையான தமிழில், அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் Balshastri Hardas பாளாசாஸ்த்ரி ஹரிதாஸ் எழுதி B.R. மகாதேவன் மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.

    Author:

    B.R. Mahadevan
    Narrator:

    Pushpalatha Parthiban
    Publisher: of Audiobook Itsdiff Entertainment
    Ebook by Swasam Publications

  • Title:

    Padmanabha Padukolai

    listen on https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&hl=en_US

    Subtitle:
    பத்மநாபா படுகொலை


    Padmanabha Padukolai / பத்மநாபா படுகொலை An Aurality Tamil Audiobook Production

    ஆயுதமேந்திய குழுவொன்று வீடு புகுந்து பட்டப்பகலில் 14 பேரைச் சுட்டுக்கொன்ற சம்பவம், தமிழ்நாட்டிற்குப் புதிது. அதுவரை தமிழர்கள் ஏ.கே 47 துப்பாக்கியைத் திரைப்படங்களில் மட்டுமே கண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் துப்பாக்கிக் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியது பத்மநாபாவின் படுகொலை. இது சகோதர யுத்தம் மட்டுமல்ல. கள்ளத்தோணியில் வந்திறங்கி, கச்சிதமாகத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட படுகொலை. கோடம்பாக்கத்தின் ஜக்காரியா காலனியை ரத்தச் சகதியாக்கிவிட்டு கொலைகாரர்கள் தப்பிச் சென்றது, தமிழகக் காவல்துறைக்குக் கிடைத்த கரும்புள்ளி. இந்தக் கொலையாளிகளைத் தேடிப் பிடித்திருந்தால், ராஜிவ் காந்தி படுகொலையை ஒருவேளை தடுத்திருக்கலாம். 38 வயதில் பரிதாபமாகக் கொல்லப்பட்டார் பத்மநாபா. ஆயுதமேந்தித்தான் பத்மநாபாவும் போராடினார் என்றாலும், அவரது கரங்களில் ரத்தக்கறை இருந்திருக்கவில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் எந்தவொரு சாதாரண வழக்கிலும் கூட அவர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. தாழ்த்தப்பட்டோர், மலையகத் தமிழர்கள், தமிழ் முஸ்லீம்கள் என அனைத்துத் தமிழ் மக்களின் ஆதரவும் பத்மநாபாவின் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்கு அன்று இருந்தது. தொலைநோக்குச் சிந்தனையாளர். சர்வதேச அரசியல் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டவர். ‘தமிழ் மண்ணுக்காக மக்களை நேசிக்கவில்லை, மக்களுக்காகத்தான் மண்ணை நேசிக்கிறேன்’ என்றவரை இனத்துரோகி என்றார்கள்.


    எழுத்தாளர் J. Ramki எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.

    Author:

    J. Ramki
    Narrator:

    Pushpalatha Parthiban
    Publisher: Audiobook by Aurality / Itsdiff Entertainment
    ebook by Swasam

  • Title:

    Karuda Puranam

    Subtitle:

    கருட புராணம்

    Karuda Puranam: - An Aurality Tamil Audio Book Production - http://aurality.app

    மகா விஷ்ணு பேசுகிறார். 'அறிவிற்சிறந்த மகாத்மாக்களே! பூமியில் இருந்தபோது நரகத்திற்கு அஞ்சி, நற்செயல்களைப் புரிந்தீர்கள். அதனால்தான் மானுடரான நீங்கள் தேவர்களானீர்கள். கிடைத்தற்கரிய மானுடப் பிறவி எடுத்தும்கூட தேவர்கள் ஆவதற்கு முயற்சிக்காதவர்கள் நரகத்தில் விழுவார்கள். நீங்களோ நற்செயல் புரிந்து தேவர்களாகுவதற்கு முயற்சித்தீர்கள். பாவிகள், நிலையற்ற உடலை நிலையானது என்று பிரமையாக எண்ணி, பாவங்கள் செய்து, நரகத்தில் உழல்கின்றனர். நீங்களோ நிலைத்த சுகமான தேவநிலைக்காக நிலையற்ற உடலுக்கான சுகங்களைத் துறந்தீர்கள். காலையில் சமைத்தால் மாலையில் பாழாய்ப் போகும் அன்னத்தைப் புசிக்கும் மானுட உடல் மட்டும் பாழாய்ப் போகாமல் இருக்குமா என்ன? அதனால் உடலோடு இருக்கும்போதே கவனமாக நற்செயல் புரிந்து, தர்ம வழியில் நடந்து நரக வேதனையிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும். இறைவன் அளித்த புலன்கள், செல்வம், அறிவு அனைத்தையும் நற்செயல்களுக்காகப் பயன்படுத்தினீர்கள். அதனால் புண்ணியமான இந்த இடத்தை வந்தடைந்தீர்கள். நீங்கள் இன்னும் சிறந்த புண்ணிய லோகங்களுக்குச் செல்வீர்கள். வழியில் அனைவரும் உங்களை வழிபடுவார்கள்.' கருட புராணம் ஒரு கருவூலம். மகா விஷ்ணுவால் அருளப்பட்டது.

    இந்தப் பூமியில் பிறந்த மானுடர்கள் எப்படி நல்ல ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்வது. நல்ல ஆத்மாக்கள் எப்படி எம லோகத்தில் ஆனந்தமாக இருக்கும் என்பதையும், கெட்ட ஆத்மாக்கள் எம லோகத்தில் எந்த எந்தக் கொடுமைகளுக்கு ஆளாகும் என்பதையும் விவரிக்கிறது கருட புராணம்.

    இந்தப் புத்தகத்தில் சொல்லப்படாத கருத்துகளே இல்லை எனலாம். புல்லரிக்க வைக்கும் அழகுத் தமிழில் இந்த நூலை எழுதி இருக்கிறார் ராஜி ரகுநாதன். எழுத்தாளர் ராஜி ரகுநாதன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் Aurality tamil audio book வழங்கும் ஒலிவடிவம் கேட்போம்.

    Author:

    Raji Raghunathan
    Narrator:

    Bhavani Anantharaman
    Publisher:
    Book by Swasam
    Audio book by : Aurality/ Itsdiff Entertainment

  • download free app - aurality today via play store and app storehttps://play.google.com/store/search?q=aurality&c=appsTitle:Eliya Tamilil Pallavar VaralaaruSubtitle:எளிய தமிழில் பல்லவர் வரலாறுSeries Name:Not SetSeries Entry:Not SetDescription:Eliya Tamilil Pallavar Varalaaru (Moolam: Rasamanikkanar): An Aurality Tamil Audiobook Productionஎளிய தமிழில் பல்லவர் வரலாறு (மூலம்: இராசமாணிக்கனார்) மா.இராசமாணிக்கனாரின் மூல நூல் இந்தத் தலைமுறையினருக்குப் புரியும் வகையில் இக்காலத் தமிழ்நடையில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. பல்லவர்களின் வரலாற்றை முழுவதுமாக அறிந்துகொள்ள இதுபோன்ற இன்னொரு நூல் இல்லை எனலாம். சோழர்களுக்கு முன்பாகத் தமிழ் நிலத்தின் பெரும்பரப்பை, ஏறத்தாழ 600 ஆண்டுகாலம் ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். சோழர்களின் காலத்தில் தமிழகக் கட்டடக் கலை உச்சம் தொட்டது என்றாலும், அதற்கான அடித்தளத்தை ஆழமாக இட்டவர்கள் பல்லவர்களே. தமிழ் நிலத்தில் முதன்முதலில் கருங்கற்கள் கொண்டு கோவில் எழுப்பிய பல்லவர்கள், செங்கற்களால் கட்டப்பட்ட கோவில்களைக் கருங்கற்களால் புதுப்பிக்கவும் செய்தார்கள். இதனைச் சான்றுகளுடன் விளக்குகிறார் நூலாசிரியர். பல்லவர் கால நீர் மேலாண்மை, காஞ்சி மாநகரின் அருமை, சைவ – வைணவ மதங்களின் எழுச்சி, சமண – பௌத்த மதங்களின் வீழ்ச்சி, பல்லவர்கள் மேற்கொண்ட போர்கள், அதன் விளைவுகள், அக்காலப் பஞ்சங்கள்; ஓவியம், சிற்பம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றிற்குப் பல்லவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அக்கால சமூகப் பொருளாதார நிலைகள், பல்லவர்களின் வீழ்ச்சி போன்றவை இந்தப் புத்தகத்தில் அழகாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் விவரிக்கப்பட்டுள்ளன.எழுத்தாளர் அச்யுதன் ஶ்ரீ தேவ் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.Author:Achyutan Shree DevNarrator:Sukanya KarunakaranBook Publisher: SwasamAudio book by Aurality/ tamilaudiobooks.comItsdiff Entertainment

  • https://play.google.com/store/audiobooks/details/R_Venkatesh_Thirattuppaal?id=AQAAAEAyURcRNM

    download free app - aurality today via play store and app store

    https://play.google.com/store/search?q=aurality&c=apps

    Title:

    Thirattuppaal

    Subtitle:

    திரட்டுப்பால்

    Series Name:

    Not Set
    Series Entry:

    Not Set
    Description:

    நகரவாழ் மத்தியத் தர வர்க்கம் என்பது படைப்புக்கான தலைக்காவிரி. தொடும் இடங்கள் எல்லாம் பாத்திரங்களும் காட்சிகளும் நிறைந்தவை. வலிகளுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் குறைவில்லை. எதிர்பார்ப்புகளுக்கும் நிராசைகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வொரு தலைமுறை எழுத்தாளர்களும் இந்தக் காவிரியில் இருந்து சிறுக சிறுக முகர்ந்து வழங்கியிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், சுப்பிரமணிய ராஜூ வழிவந்தவரான ஆர்.வெங்கடேஷும் அதே முயற்சியையே இந்தப் புத்தகத்தில் செய்துள்ளார். நேரடி சம்பவங்களோடு, மனவோட்டம் சார்ந்த சொற்சித்திரம் தீட்டும் பாணியைப் பின்பற்றும் ஆர்.வெங்கடேஷ், எங்கும் குரல் உயர்த்திப் பேசுவதில்லை. வாழ்க்கையின் சில துண்டுகளை இணைத்து, கோவையாக்குவதன் வாயிலாக, கதாபாத்திரங்களில் உள்ளூர ஊசலாடும் மனச்சிக்கல்களுக்கு, எழுத்து வடிவம் தர முயற்சி செய்துள்ளார். மத்தியத் தர வர்க்கத்தின் மீதான எந்தவிதமான விமர்சனத்தையோ, தீர்ப்புகளையோ முன்வைக்காமல், அதன் போக்கை முடிந்தவரை அப்படியே பதிவு செய்வது, ஆர்.வெங்கடேஷின் பாணி. நீங்கள் அறிந்த உலகத்தையே, உங்களுக்கு மலர்த்திக் காட்டும் இந்தச் சிறுகதைத் தொகுதி. ஆர்.வெங்கடேஷ் - கணையாழி இதழின் மூலம் அறிமுகமானவர். எழுதவந்து 34 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 2 கவிதைத் தொகுதிகள், 2 நாவல்கள், 4 சிறுகதைத் தொகுதிகள் உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இராஜாஜி, ஆதவன் ஆகியோரது இலக்கிய பங்களிப்புகள் பற்றி, சாகித்ய அகாதெமிக்காக சிறுநூல்கள் எழுதியுள்ளார். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி வழங்கிய எழுத்துத் துறைக்கான ‘நம்பிக்கை நட்சத்திரம்’ விருது, கலைமகள் நாராயணசாமி குறுநாவல் போட்டியில் முதல் பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

    இது இவரது ஐந்தாவது சிறுகதைத் தொகுதி. எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.

    An Aurality audiobook production

    Author:

    R. Venkatesh
    Narrator:

    Pushpalatha Parthiban
    Publisher:

    Itsdiff Entertainment
    Title:

  • Download free app Aurality tamil audio platform

    https://play.google.com/store/search?q=aurality&c=apps

    download chozha sooriyan - part 1 tamil audiobook
    https://play.google.com/store/audiobooks/details/Siraa_Choza_Sooriyan?id=AQAAAEAyEVZRdM

    Book Publisher: Swasam
    Audio book by Aurality/ tamilaudiobooks.com
    Itsdiff Entertainment

    Title:

    Choza Sooriyan

    Subtitle:

    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன்

    Series Name:

    Part

    Series Entry:

    1

    Description:

    Description
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production

    Author:

    Siraa
    Narrator:

    Pushpalatha Parthiban

  • download on google play - https://play.google.com/store/audiobooks/details/Sathiyapriyan_Novel_vadivil_Manimekalai?id=AQAAAEAykRrROM

    download free app - aurality today via play store and app store

    https://play.google.com/store/search?q=aurality&c=apps
    Title:

    Novel vadivil Manimekalai

    Subtitle:

    நாவல் வடிவில் மணிமேகலை

    Series Name:

    Not Set
    Series Entry:

    Not Set
    Description:

    சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழர்களின் வாழ்வில் கலந்த இரட்டைக் காப்பியங்கள். மணிமேகலை கூறும் தத்துவக் கூறுகளும் வாழ்வியல் கருத்துகளும் அறம் தொடர்பான நிலைப்பாடுகளும் மிக முக்கியமானவை. காதல் வாழ்க்கைக்கும் துறவு வாழ்க்கைக்கும் இடையேயான அத்தனை முரண்பாடுகளையும் மணிமேகலை போல அலசும் பிறிதொரு நூல் இல்லை என்றே சொல்லிவிடலாம். மணிமேகலை நூலில் உள்ள அனைத்து ரசங்களையும் உள்ளடக்கி நாவல் வடிவில் எழுதுவது என்பது பெரிய சவால். அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார் சத்தியப்பிரியன். தமிழில் ‘மணிமேகலை’க்கு இத்தனை விரிவான ஆழமான அதேசமயம் எளிதான உரை நாவல் வடிவில் வந்ததில்லை எனலாம். ‘மணிமேகலை’யில் வரும் தத்துவப் போக்குகளைக் கூட எல்லாரும் புரிந்துகொள்ளும் வண்ணம் நூலாசிரியர் எழுதியிருப்பது சிறப்பு. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆசிரியர் குறிப்பாகச் சொல்லப்படும் கூற்றுகள், மணிமேகலை என்னும் நூலையும் தாண்டி, நம் பண்பாட்டின் பல கண்ணிகளைத் தொட்டுச் செல்கின்றன. இது இந்த நூலை மேலும் முக்கியமானதாக்குகிறது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.

    A proud Aurality production

    Author:

    Sathiyapriyan
    Narrator:

    Uma Maheswari
    Book Publisher: Swasam
    Audio book by Aurality/ tamilaudiobooks.com
    Itsdiff Entertainment

  • Also on Aurality platform - for tamilaudiobooks - https://play.google.com/store/search?q=aurality&c=apps

    V.O.C on google play
    https://play.google.com/store/audiobooks/details/P_Saravanan_V_O_C?id=AQAAAEAy1iWWBM

    வெற்றியும் தோல்வியும் துயரமும் கலந்த வ.உ.சி.யின் ஒப்பற்ற வாழ்க்கையை விவரிக்கும் நூல் இது. பிரிட்டிஷ் ஆட்சியில் சுதேசிக் கப்பலை வ.உ.சி. வெற்றிகரமாக ஓட்டிக் காண்பித்தார். தொழிலாளர்களின் முதல் வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தினார். தேசத் துரோகம் செய்ததாக பிரிட்டிஷாரால் சிறை வைக்கப்பட்டார். இந்தியத் தேசத்துக்காக இப்படிப் பாடுபட்ட வ.உ.சி.யின் இறுதிக் காலம் எப்படி இருந்தது? தனது செல்வத்தையெல்லாம் இழந்து வறுமையில் வாடிய வ.உ.சி., மளிகைக் கடையில் வேலை செய்தார். சுடுகாட்டுக்கு அருகில் குறைந்த வாடகைக்கு வீடெடுத்து வாழ்ந்தார். வ.உ.சி. இறப்பதற்கு 23 நாட்களுக்கு முன்பு தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் அவரே தன் துயர்மிகு வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார். இப்படி வ.உ.சி.யின் வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும், வ.உ.சி. மீதான வழக்கு விவரங்களையும் எளிமையான தமிழில் எழுதி இருக்கிறார் ப.சரவணன்.

    எழுத்தாளர் ப.சரவணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் வ.உ.சி புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்

    an Aurality Production

    Author:

    P. Saravanan
    Narrator:

    Sri Srinivasa
    Publisher: Aurality and

    Itsdiff Entertainment

  • Kaanal Neero Kanmaniye

    https://play.google.com/store/audiobooks/details/Uma_Nathan_Kaanal_Neero_Kanmaniye?id=AQAAAEDSF2FXoM

    Also on Aurality platform - for tamilaudiobooks - https://play.google.com/store/search?q=aurality&c=apps

    Subtitle:

    கானல் நீரோ கண்மணியே

    நேசமான மனைவி, சொந்த தொழில், அன்பான தாய், நலமாய் வாழும் தங்கை, தோள் கொடுக்கும் தோழமை. அதோடு தன் காதல் வாழ்வின் சாட்சியாய் தங்களுக்கு வரப்போகும் குழந்தை என சந்தோஷ வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த வெற்றியை அடித்து கீழே தள்ளியது, பிரசவத்தில் மரணித்த தன் மனைவி தியாவின் முடிவு. அதற்கு மேல் மற்றொரு அதிர்ச்சி தியாவின் கடைசி ஆசையாய் அவள் தன் தமக்கையை மறுமணம் செய்யக் கூறியது. யாரை இனி தன் வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று எண்ணியிருந்தானோ அவளையே எப்படி மணந்து கொள்வான்? அதன் பின் அவன் வாழ்வில் சந்தோஷம் இருக்குமா?

    Loving Wife, Succesful Business, Affectionate Mother, Happily settled sister, Understanding Friends. What more a person need? Vetri is blessed with a baby as a proof of his love with his wife. But all his happiness in cloud nine is doomed, when his wife died in child birth. More than that, his wofe’s last wish for him to marry her elder sister Natchathra. The same person, whom he never wanted to meet in life ever. What will happen in Vetri’s life? Will he see happiness in life again?

    Author:

    Uma Nathan
    Narrator:

    Rajeswari Ramkumar
    Publisher: Aurality

    Itsdiff Entertainment

  • download FREE aurality app today to enjoy these Tamil Historical Novelplay.google.com/store/search?q=aurality&c=appsTitle:YudhishtramSubtitle:Short Story Collectionவித்யா சுப்ரமணியத்தின் சிறுகதைகள் எளிமையானவை, ஆனால் ஆழமானவை. விரிந்துபட்ட பல்வேறு தளங்களில் மனித உறவுகளையும் அவர்களது ஆழ்மனக் கொந்தளிப்புகளையும் விசாரணை செய்யும் அற்புதமான சிறுகதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து யாரும் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் அழகான ஒரு புனைவை உருவாக்கிவிடுகிறார் ஆசிரியர். உரையாடல்கள் மூலம் நகர்த்திச் செல்லப்படும் சிறுகதைகள், பல்வேறு கோணங்களில் பயணித்து, வாழ்க்கைத் தருணங்கள் குறித்த பல கேள்விகளை உருவாக்கி, யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் சட்டென்று உச்சம்கொண்டு வாசகர்களைத் திகைக்க வைக்கின்றன. சாதாரண மனிதர்களின் அசாதாரணத்துவத்தை இந்தப் புத்தகத்தில் இருக்கும் அனைத்துக் கதைகளிலும் நாம் காணலாம்.எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.Author:Vidya SubramaniamNarrator:Pushpalatha ParthibanAudiobook Publisher:Itsdiff Entertainment / Aura;lityBook/ Ebook - swasam

  • Mithran

    மித்ரன் (வரலாற்று நாவல்) https://play.google.com/store/audiobooks/details/Sira_Mithran?id=AQAAAEAylHLUUM

    download FREE aurality app today to enjoy these Tamil Historical Novel
    https://play.google.com/store/search?q=aurality&c=apps

    இராஜேந்திர சோழனுக்கு நண்பனாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது? அப்படி ஒருவனே மித்ரன். மாமன்னர் இராஜேந்திர சோழன் கங்கை படையெடுப்பு செய்தார், கடாரம் மற்றும் ஸ்ரீ விஜயத்தை வென்றார். அத்துடன் கங்கைகொண்ட சோழபுரம் என்ற புது தலைநகரை உருவாக்கினார். இந்த வரலாற்றுச் செய்திகளை வைத்து, கற்பனைக்கு ஏற்ப ஒவ்வொரு இடத்தையும் கோத்து, மித்ரனின் பயண வழியாக்கி, இந்த நாவலை உருவாக்கி இருக்கிறார் எழுத்தாளர் சிரா. இராஜேந்திர சோழனைப் பற்றிப் பேசிய நூல்களில் மித்ரனுக்கு ஒரு தனி இடம் உண்டு. இதன் கதைக்களம் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதே அதன் காரணம்.

    மித்ரன் உங்களை வசீகரிப்பான்.

    எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்

    an Aurality Production

    Author:

    Sira
    Narrator:

    Pushpalatha Parthiban
    Audiobook Publisher: Aurality / Itsdiff Entertainment

    book/ ebook - swasam Pathipagam/ Padhipagam

  • https://play.google.com/store/audiobooks/details/Vidya_Subramaniam_Kasi_Tamil_Sangamam?id=AQAAAEDSZx4n3M
    Kasi Tamil Sangamam

    காசி தமிழ்ச் சங்கமம்

    காசி இந்தியாவின் புனித நகரம் மட்டுமல்ல. நம் தமிழை வளர்த்த நகரமுமாகும். மகாகவி பாரதியின் கவிமனம் காசியில்தான் வளர்ந்தது. காசி வடநாட்டின் பகுதியாக இருந்தாலும் பல சம்பிரதாயங்களும் சடங்குகளும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சியாகவே இன்றும் அங்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.


    தமிழ்நாட்டிலிருந்து ஒரு குழு காசி தமிழ்ச் சங்கமத்திற்குச் செல்லும் பயணத்தை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் பயணத்தின் மூலம் காசியின் பெருமை, புனிதம், வரலாறு, பண்பாடு, தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் அதனுடன் உள்ள வரலாற்றுத் தொடர்பு ஆகியவற்றை ஆசிரியர் சுவையாக விளக்குகிறார்.


    இந்தியாவில் பல மதங்களும் கலாசாரங்களும் மொழிகளும் இருந்தாலும், இந்திய மக்களிடையே அடிநாதமாக ஓடி அனைவரையும் ஒன்றாக இணைக்கும் பண்பாட்டுப் பெருமையை நேர்த்தியாக எடுத்துரைக்கிறது இந்தப் புத்தகம். மனதைக் சுவரும் தமிழில் எழுதி இருக்கிறார் வித்யா சுப்ரமணியம்.

    எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.

    Author:

    Vidya Subramaniam
    Narrator:

    Pushpalatha Parthiban
    Publisher: Aurality /
    Itsdiff Entertainment

  • #Auralityaudio #auralitytamilstory #tamilaudiobook


    https://play.google.com/store/audiobooks/details/Sethupathi_Arunachalam_Nerungi_Varum_Idiyosai?id=AQAAAEDS5UGlgM

    Title:

    Nerungi Varum Idiyosai

    Subtitle:

    பிரிட்டாஷாரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாபெரும் பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல்


    நெருங்கி வரும் இடியோசை (நாவல்)

    “நான் ஏழு நாளா ஒன்னுமே சாப்டல. சின்னச் சின்ன மீன், நத்தைங்கள்லாம் பிடிச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். இப்போ அதெல்லாமும் குறைஞ்சு போச்சு. தாமரைக்குளம் இருக்குல்ல, அதெல்லாம் இப்போ வெறும் சேறும் சகதியுமாய்டுச்சு. சின்னப் பசங்க, பொண்ணுங்க எல்லாம் கழுத்தளவு தண்ணில நின்னுக்கிட்டு மீன், நத்தையெல்லாம் கிடைக்காதான்னு அளைஞ்சுக்கிட்டு இருக்காங்க. எல்லாம் காலி. சின்னக் குழந்தைகள்லாம் கரையில உக்காந்து அழுதுக்கிட்டு இருக்காங்க. அதுங்க அழுகைய நிறுத்தறதுக்காக, அம்மாக்காரிங்கள்லாம் பச்சை நத்தையைப் பிடிச்சு அவங்க வாய்ல திணிச்சிட்டு, இன்னும் கிடைக்குமான்னு குளத்துக்குள்ள போறாங்க. அதையெல்லாம் சாப்பிட்டு எத்தனையோ குழந்தைங்க செத்துப் போய்டுச்சு.” பிரிட்டாஷாரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாபெரும் பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல். வங்க மூல நாவலான ‘ஆஷானி சங்கேத்' நூலிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டது.

    இந்நாவலில், பஞ்சம் எடுத்த எடுப்பிலேயே நம்மைப் பதறச் செய்யும் நோக்கத்தில் செயற்கையாக அறிமுகப்படுத்தப்படவில்லை. மாறாக, எளிமையான உரையாடல்கள் மூலமும், கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரத்தைச் சொல்வது மூலமும் மெல்ல மெல்லப் பஞ்சம் அறிமுகமாகிறது. தெளிவான நீர் உள்ள குளம் ஒன்றில் மெல்ல மெல்லப் படரும் வெங்காயத் தாமரை போல. ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த பஞ்சத்தின் தீவிரமும் நம்மை வந்தடையும்போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பதற்றம் ஏற்படுகிறது. இந்நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெயர்களைத் தவிர, இம்மனிதர்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும், நாம் இங்கு வாழும் வாழ்க்கையை ஒத்ததுதான். அதனால் இந்நாவலை நம் ஊரில் நிகழும் ஒரு கதை என்ற அளவில் நம்மால் எளிதாக அணுக முடிகிறது.

    எழுத்தாளர் பிபூதிபூஷண் பந்தோபாத்யாயா எழுதி சேதுபதி அருணாசலம் மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.

    Author:
    Sethupathi Arunachalam
    Narrator:
    Uma Maheswari
    Publisher:
    Itsdiff Entertainment

  • Title:

    #Auralityaudio #auralitytamilstory #tamilaudiobook

    Maharadhan

    மகாரதன் - https://play.google.com/store/audiobooks/details/Siraa_Maharadhan?id=AQAAAEAyyiyKDM

    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்

    an Aurality Production

    Author:

    Siraa
    Narrator:Pushpalatha Parthiban
    Publisher: Itsdiff Entertainment